Thursday, October 27, 2005

Chumma

தீபாவளி நெருங்குகிறது! தேசிகன் நல்ல பதிவு செய்திருந்தார். பெங்களூரில் நல்ல மழை! 1958க்குப் பிறகு இந்த வருடம் என்று எந்கோ படித்த ஞாபகம். ஆனாலும் ஆச்சர்ய பட வைப்பது மீண்டும் சகஜ நிலைமைக்கு வர நாம் எடுக்கும் நேரம் தான். திருச்சியிலும் செம மழை போல. தினமலர் புண்ணியத்தால் காணப்பெற்றோம். Bangalore.pps, Trichy_After_Rains.zip போன்றவை forward செய்யப் பெற்று email ன் மகத்துவத்தை புரிய வைத்தன. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா வேண்டாமா என்று ஒரு தயக்கம். குழந்தைத் தொழிலை ஒத்துக்கொள்வதா? எவ்வளவு சுற்றுச்சூழல் மாசு? ஆனால் Standard Fireworks போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் சிறார்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்று கேள்வி! புதுசு உடுத்தும் ஆசையும் குறைந்து விட்டது:(. நாம் பட்டாசு வாங்கினாலும் சிறார் தொழிலாளர்களுக்கு வருமானம் ஆகிற்று. ஒன்றும் புரியவில்லை. கடைசியில் ஒரு 6 மணிக்கு எழுந்து, தலைக்கு குளித்து (கங்கா ஸ்னாநம்), பக்ஷணம் கொறித்து, idiot boxக்கு முன்னாடி தொலைத்து விடுவெனோ என்று பயமாக இருக்கிறது. என் தோழியுடன் யார் முதலில் எழுப்புகிறார்கள் என்று bet.
நிறைய plans! என் காதலி, நீ இதை படித்து கொண்டிருக்கையில் நான் உன் வீட்டில் இருப்பேன். உன் தாய், தந்தை, தம்பியுடன் இரண்டு நாட்கள். பின் என் தங்கையின் புகுந்த வீட்டில் இந்த வருட தீபாவளி. இடையில் கல்லூரி நண்பர்களை சந்திக்க முயல்வேன்.
மீண்டும் 4 மணி-சீயக்காய்-கண் எரிச்சல் குளியல், யார் முதல் என்று போட்டி போட்டு வெடிக்கும் வெடி, மல்லிகை பூவாய் இட்லி, இனிப்பு காரம், புத்தாடை, தீபாவளி இனாம், சாலமன் பாப்பையா பட்டிமன்றம், புதிய பாடல், எல்லாம் வேண்டும். மழை கொஞ்சம் ஓய்ந்திருக்க வேணும்! எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். Have a Safe and Happy Diwali! White house is going to host Diwali function for the third year in row... Link

No comments: